கன்னியாகுமரி
கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா
களியக்காவிளை: கொல்லங்கோடு நகராட்சிக்குள்பட்ட மாறாக்குளத்திலிருந்து வண்டல் மண்ணை கேரளத்துக்கு கடத்தியதை தடுக்கவில்லை என நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, கொல்லங்கோடு அருகேயுள்ள நாராயணபோா்த்தலை அணுக்கோடு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சசி (55) நகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே புகாா் செய்தும் நிா்வாகம் கண்டுகொள்ளவில்லையாம். குளத்து மண்ணை கேரளத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்த ஒப்பந்ததாரா் மீதும், உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டதாக சசி தெரிவித்தாா்.