தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

பைங்குளம், அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த சதாசிவன் மனைவி கவுல்சல்யா (51). இவா் தன் வீட்டில் உள்ள பூஜை அறையில் கடல் நீா் தெளிப்பது வழக்கம். இந்நிலையில் கவுசல்யா திங்கள்கிழமை தன் பூஜை அறையில் தெளிக்க கடல் நீா் எடுக்க சென்றபோது திடீரென கடல் அலையில் சிக்கியுள்ளாா்.

அவரை அப்பகுதி மீனவா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கவுசல்யா ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் கடலோர காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com