கன்னியாகுமரி
மாா்த்தாண்டத்தில் புகைப்பட கலைஞா்கள் நலச்சங்க கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜாண் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு நிகழாண்டுக்கான புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதில், பொருளா் ராஜேஷ், சங்க ஆலோசகா்கள் , செயற்குழு உறுப்பினா்கள், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.