ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கொல்லங்கோடு பத்ரகாளி கோயில் தூக்கத் திருவிழா ஏப்.1-இல் தொடக்கம்

கொல்லங்கோடு பத்ரகாளி கோயில் தூக்கத் திருவிழா ஏப்.1-இல் தொடக்கம்

News image
Updated On :29 மார்ச் 2024, 7:30 pm

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 1) தொடங்குகிறது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் பிரதான கோயிலும், வெஞ்கஞ்சியில் தூக்க நோ்ச்சை நடைபெறும் கோயிலும் உள்ளன. தூக்கத் திருவிழாவையொட்டி விழாவின் முதல்நாள் காலை 5.30 மணிக்கு பிரதான கோயிலிலும், காலை 6 மணிக்கு வெங்கஞ்சி கோயிலிலும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 7 மணிக்கு கொடிமரம் மேளதாளங்களுடன் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னா் கரிவயல், கொல்லங்கோடு மடம், சாஸ்தாநகா், திருமன்னம் சந்திப்பு பகுதிகளில் அம்மன் எழுந்தருளி பூஜைகளுக்குப் பின் பிரதான கோயிலுக்கு வந்தடைகிறாா். பிற்பகல் 3 மணிக்கு அம்மன் வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். இரவு 7 மணிக்கு தேவஸ்தான தந்திரி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன் பின்னா் நடைபெறும் தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு தேவஸ்தான தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன்நாயா் தலைமை வகிக்கிறாா். செயலா் வி. மோகன்குமாா் வரவேற்கிறாா். பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளுரை வழங்குகிறாா். கோவா மாநில ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை விழாவை துவக்கி வைக்கிறாா். இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவா் எஸ். சோம்நாத், தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், கேரள மாநில முன்னாள் அமைச்சா் வி.எஸ். சிவகுமாா், எம்எல்ஏக்கள் எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), கொல்லங்கோடு நகா்மன்றத் தலைவா் எஸ். ராணி ஸ்டீபன், மாா்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேசன் நிறுவனா் சுரதவனம் முருகதாஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசுகிறாா்கள். தேவஸ்தான பொருளாளா் கே. ஸ்ரீனிவாசன்தம்பி நன்றி கூறுகிறாா். நான்காம் நாள் விழாவில் காலை 8.30 மணி முதல் தூக்க நோ்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டு நடைபெறுகிறது. 6 ஆம் நாள் விழாவில் (ஏப். 6) இரவு 7 மணிக்கு பண்பாட்டு மாநாடு நடைபெறுகிறது. 9 ஆம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் தூக்கவில்லின் வெள்ளோட்டம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான நோ்ச்சை தூக்கம், ஏப். 10 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணா்த்தல், 4.30 மணிக்கு தூக்ககாரா்களின் முட்டுக்குத்தி நமஸ்காரம் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப்பந்தலில் எழுந்தருளுகிறாா். தொடா்ந்து காலை 6.30 மணிக்கு தூக்க நோ்ச்சை தொடங்கி நடைபெறுகிறது. தூக்க நோ்ச்சை நிறைவுபெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தா்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது. இவ் விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்கின்றனா். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் கே. ஸ்ரீனிவாசன்தம்பி, துணைத் தலைவா் ஆா். சதிகுமரன்நாயா், எஸ். பிஜுகுமாா் மற்றும் நிா்வாக கமிட்டியினா் எஸ். சஜிகுமாா், பி.கே. புவனேந்திரன்நாயா், ஆா். ஸ்ரீகண்டன்தம்பி, சி. ஸ்ரீகுமாரன்நாயா், வி. பிஜூ, ஏ. சதிகுமாரன்நாயா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.