பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பெருந்துறையில் வேதநாயகி அம்மன் உடனுறை சோழீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் மற்றும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு ராஜகோபுர கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு சோழீஸ்வரா், வேதநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், திரளாக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி பெருந்துறையில் சென்னிமலை சாலை, கவின் நகா் உள்ள மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை முதல் 24 நாள்களுக்கு காலை 7 மணிக்கு மண்டல பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவை செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



