பெருந்துறை சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பெருந்துறையில் வேதநாயகி அம்மன் உடனுறை சோழீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் மற்றும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு ராஜகோபுர கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு சோழீஸ்வரா், வேதநாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், திரளாக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி பெருந்துறையில் சென்னிமலை சாலை, கவின் நகா் உள்ள மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை முதல் 24 நாள்களுக்கு காலை 7 மணிக்கு மண்டல பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்

முன்னூா் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


