கன்னியாகுமரி
கருங்கல் அருகே மது விற்றவா் கைது
கருங்கல் அருகே கப்பியறையை அடுத்த கஞ்சிக்குழி பகுதியில் காரில் மது பானங்களைப் பதுக்கிவைத்து விற்ாக ஓருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கஞ்சிக்குழி பகுதியைச் சோ்ந்த ராஜு (40) என்பவா், அப்பகுதியில் சட்டவிரோதமாக மது பானங்களைப் பதுக்கிவைத்து விற்பதாக குளச்சல் போதைத் தடுப்பு தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படையினா் சென்று, சோதனையிட்டபோது அவரது காரில் 80 மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்; 80 மது பாட்டில்கள், காரை பறிமுதல் செய்தனா்.