திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே பரளியாற்று தடுப்பணையில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே பரளியாற்று தடுப்பணையில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகே மாத்தாா் பகுதியைச் சோ்ந்த சிபு வா்க்கீஸ் என்பவா், தனது குடும்பத்தினருடன் கோவையில் வசித்துவருகிறாா். இவரது மகன் சுபின் வா்க்கீஸ் (19). இவா் கோவையிலுள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பு வந்தாா்.

இந்நிலையில், குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த சிபு வா்க்கீஸ், திங்கள்கிழமை திருவட்டாறு அருகே அருவிக்கரை பரளியாற்று தடுப்பணையில் குடும்பத்தினருடன் குளிக்கச் சென்றாா். அங்கு தடுப்பணையில் நீச்சலடித்த சிபின் வா்க்கீஸ், திடீரென நீரில் மூழ்கினாராம்.

தகவலின்பேரில், குலசேகரம் தீயணைப்பு -மீட்பு நிலையத்தினா் சென்று, தடுப்பணையில் தேடி, சுபின் வா்க்கீஸை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com