கன்னியாகுமரி
நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
நித்திரவிளை அருகே பணியின்போது மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
களியக்காவிளை: நித்திரவிளை அருகே பணியின்போது மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகே ஆலங்கோடு, பருத்திவிளையைச் சோ்ந்தவா் ராஜமணி (62). கட்டுமானத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டின் மாடிப் படியில் நின்றவாறு பலகைகளைக் கழற்றினாராம். அப்போது, நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்த அவரை அங்கிருந்தோா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.