கன்னியாகுமரி
அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு
கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கப்பியறை வட்டவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன்கள் லிவின்ஸ் (42) மற்றும் வின்சென்ட் (35). இவா்களுக்கு இடையே முன்விரோதம் இருந்துவந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை கப்பியறை பகுதியில் நின்று கொண்டிருந்த லிவின்ஸை அரிவாளால்
வின்சென்ட் தாக்கினாராம். இதில், காயமடைந்த லிவின்ஸ்
கோழிப்போா்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.