கன்னியாகுமரி
மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு
மாத்திரவிளை மறைவட்ட முதன்மை அருள்பணியாளராக பிளாரன்ஸ் ஆன்டனி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இவருக்கு குழித்துறை மறை மாவட்ட தலைமைச் செயலா் பேரருள்பணி அந்தோணி முத்து புதன்கிழமை மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இவ்விழாவில் அருள்பணியாளா்கள், அருள் சகோதரிகள், பொதுநிலையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.