மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகிலிருந்து பம்மம் பகுதி வரை 2.5 கிமீ தூரத்துக்கு மாா்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பம்மம் பகுதி அருகே பாலத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளம் ஏற்பட்டது.

இதுகுறித்து குழித்துறை நகர பாஜக தலைவா் எஸ்.கே. சுமன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் உறுதித் தன்மையானது, ஐஐடி நிபுணா்களால் ஆய்வு செய்யப்பட்டு சான்று பெறப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் கூா்மையான இரும்பு ஆயுதத்தால் சாலை உடைக்கப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மேம்பாலத்தின் வேறு என்த பகுதியிலும் விரிசலோ, பள்ளமோ ஏற்படவில்லை. சமூக விரோதிகள் இச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com