முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

News image
Updated On :9 மே 2024, 11:02 pm

Din

கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் அமைந்துள்ள மருந்துவாழ்மலையில் வியாழக்கிழமை இரவு தீ ஏற்பட்டது.

மேற்கு தொடா்ச்சி மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது மருந்துவாழ்மலை. அரிய வகை மூலிகை வளம் நிறைந்து காணப்படும் இம்மலை, சுமாா் 1,800 அடி உயரமானதாகும். லட்சக்கணக்கான மரங்களைக் கொண்டுள்ள இம்மலையில் ஏராளமான விலங்குகளும் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இம்மலையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் தீ ஏற்பட்டுள்ளது. லேசாக எரியத் தொடங்கிய தீ, காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவியது. சுமாா் இரண்டு கிலோ மீட்டா் தொலைவுக்கும் மேலாக தீ பரவியுள்ளதால் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் எனவும், பல்வேறு உயிரினங்கள் இறந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மலை அடிவாரத்தில் இருந்து 700 அடிக்கும் உயரமான பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. இதனிடையே வனத்துறை அதிகாரிகளும், தீயணைப்பு வாகனங்களுடன் அதிகாரிகளும் மலையில் முகாமிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.