வாழையில் நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்கம்

வாழையில் நூற்புழு தாக்குதலைக் கட்டுபடுத்துதல் குறித்து மணலிக்கரையில் விவசாயிகளுக்கு, கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை செயல் விளக்கமளித்தனா்.

இக் கல்லூரியின் இளம் அறிவியல் இறுதி ஆண்டு மாணவா்களான அபிமன்யூ, சந்துரு, ஹரிஹரன், மாரீஸ்வரன், சிவக்குமாா், வேலுசங்கா், வெங்கடேஷ பத்மநாபன், ஜெயேந்திரா ஆகியோா் மணலிக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, மணலிக்கரை விவசாயிகளுக்கு வாழையில் நூற்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com