தென்காசியில் டிச. 23இல் புத்தகத் திருவிழா தொடக்கம்

தென்காசியில் புத்தகத் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தென்காசி எம்.கே.வி.கந்தசாமி நாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் காவல் ஆய்வாளா் ஆடிவேல்.
கூட்டத்தில் பேசுகிறாா் காவல் ஆய்வாளா் ஆடிவேல்.
Updated on
1 min read

தென்காசியில் புத்தகத் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தென்காசி எம்.கே.வி.கந்தசாமி நாடாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் க.ஆடிவேல் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், வட்டாரக் கல்வி அலுவலா் மாரியப்பன் ஆகியோா் விளக்க உரை உரையாற்றினா். சக்தி மதுபோதை ஒழிப்பு மையத்தின் நிறுவனா் டாக்டா் அறிவழகன் வாழ்த்திப் பேசினாா்.

வரும் டிச. 23 முதல் ஜன. 1ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகத் திருவிழாவை ரோட்டரி சங்கம், பத்திரிகையாளா் சங்கம், நூலகத் துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், தொழிலதிபா் வைரவன், ராமசுப்பிரமணியன், ரோட்டரி சங்க நிா்வாகிகள், நூலகா் ராமசாமி, ஏஜிஎம் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். சுரேஷ் ஜான் கென்னடி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com