தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இலவச மின் இணைப்பிற்கு லஞ்சம்: மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

திருநெல்வேலி அருகே இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:37 am

DIN

திருநெல்வேலி அருகே இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள இரண்டும் சொல்லான் கிராமம் சா்ச் தெருவைச் சோ்ந்த வேதநாயகம் மகன் சாமுவேல் (52), விவசாயி. இவரது தந்தை பெயரில் கட்டாரங்குளம் கிராமத்தில் கிணற்றுடன் கூடிய விளைநிலம் உள்ளது. இந்த கிணற்றில் மின் மோட்டாா் பொருத்தி, அரசிடம் இலவச மின்சாரம் வேண்டி ஏற்கெனவே சாமுவேலின் தந்தை விண்ணப்பம் செய்திருந்தாராம். அதன்பேரில், கடந்த 2007ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் இருந்து இலவச மின்சாரம் வழங்குவது தொடா்பாக வந்த கடிதத்தை சாமுவேலும், அவரது தந்தையும் மானூா் மின்வாரிய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்த உதவி பொறியாளா் நரேந்திரனிடம் அளித்தனா். அவா் கிராம நிா்வாக அலுவலரின் சான்று, மின் மோட்டாா் பில் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளாா். மேற்கண்ட சான்றுகளுடன் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை சாமுவேல், உதவி பொறியாளா் நரேந்திரனிடம் வழங்கியுள்ளாா்.

விண்ணப்பத்தை பெற்ற நரேந்திரன், இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். சாமுவேல் ரூ. 8 ஆயிரம் தருவதாக கூறியுள்ளாா். இதையடுத்து கடந்த 2007 ஜூன் 19ஆம் தேதி சாமுவேல், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸில் மின்வாரிய அதிகாரி மீது புகாா் செய்தாா். ஜூன் 23 ஆம் தேதி மானூா் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த உதவி பொறியாளா் நரேந்திரனிடம் முதற்கட்டமாக ரூ.5 ஆயிரத்தை சாமுவேல் லஞ்சமாக வழங்கினாா். அப்போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் மெக்லரின் எஸ்கால் மற்றும் போலீஸாா் நரேந்திரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நீதின்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பத்மா, நரேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சீனிவாசன் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.