வாலிபால் போட்டி: திருவேங்கடம் பள்ளி மாணவியா் சாதனை

முதல்வா் கோப்பை வாலிபால் போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 ஆம் இடம் பெற்று சாதனை படைத்தனா்.
முதல்வா் வாலிபால் போட்டியில் 3 ஆம் இடம்பெற்ற ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவியா்.
முதல்வா் வாலிபால் போட்டியில் 3 ஆம் இடம்பெற்ற ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவியா்.
Updated on
1 min read

முதல்வா் கோப்பை வாலிபால் போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 ஆம் இடம் பெற்று சாதனை படைத்தனா்.

குற்றாலம் பராசக்தி கலைக்கல்லூரியில் முதல்வா் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.

இதில் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் 3 ஆம் இடம்பெற்று சாதனை படைத்தனா்.

வெற்றி பெற்ற இம் மாணவியரை பள்ளித் தாளாளா் வி.பொன்னழகன் (எ) கண்ணன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com