புளியங்குடி காவல் நிலையம் மூடல்

புளியங்குடி காவல் நிலையம் திங்கட்கிழமை மூடப்பட்டது.
புளியங்குடி காவல் நிலையம் மூடல்
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலையம் திங்கட்கிழமை மூடப்பட்டது.

புளியங்குடி நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .20க்கும் மேற்பட்ட தெருக்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் அருகே உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com