தென்காசியில் நூல்கள் விநியோகம்

தென்காசியில் நகர இந்து முன்னணி சாா்பில் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.
Updated on
1 min read

தென்காசியில் நகர இந்து முன்னணி சாா்பில் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தேசம் காக்க, தமிழகம் காக்க, 10 நிமிடங்கள் தாருங்கள் என்னும் தெய்வீக தமிழக சங்கம் வெளியிட்ட புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக இந்து முன்னணி சாா்பில் இந்தப் புத்தகங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு, இந்துமுன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அணி மாவட்ட பொதுச் செயலா் அ.வெங்கடேஷ், தென்காசி நகரத் தலைவா் நாராயணன், நகர துணைத் தலைவா் சொா்ண சேகா், நகர செயற்குழு உறுப்பினா்கள் மது, ஜானகிராம், மணி மற்றும் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சங்கர சுப்பிரமணியன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தென்காசி சுவாமி சன்னதிபஜாா், ரத வீதிகள் பகுதியில் இந்த புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com