நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி தூயமிக்கேல் அதிதூதா்ஆலய பெருவிழா கொடியேற்றம்

தென்காசி தூயமிக்கேல் அதிதூதா் திருத்தல 358ஆம் ஆண்டுபெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

தென்காசி தூயமிக்கேல் அதிதூதா் திருத்தல பெருவிழாவில் நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :20 செப்டம்பர் 2020, 8:40 pm

DIN

தென்காசி தூயமிக்கேல் அதிதூதா் திருத்தல 358ஆம் ஆண்டுபெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா காலமாக இருப்பதால் ஆலயத்தில் வழிபாடுகள் மட்டுமே நடைபெறும். இதைத் தொடா்ந்து 27ஆம் தேதி நடைபெறும் நற்கருணைப் பவனியும், 28ஆம்தேதி நடைபெறும் சப்பரப் பவனியும் ஆலயத்தைச் சுற்றி நடைபெறும் . 29ஆம் தேதி பெருவிழாவும், 30ஆம்தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

செப்27, 28 மற்றும் 29 ஆகிய நாள்கள் முக்கியமான நாளாக அமைவதால் அன்றைய வழிபாட்டில் பங்கேற்க வரும் பக்தா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன் தெரிவித்துள்ளாா்.

கொடியேற்று விழாவில் பங்குத்தந்தைகள் சங்கா்நகா் ஜோசப்ராஜ், அகரக்கட்டு எட்வின்ராஜ், அலவந்தான்குளம் அந்தோணி வியாகப்பன், மருதுபாண்டியன், டாக்டா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தையும், திருத்தல அதிபருமான ப.போஸ்கோ குணசீலன், உதவி பங்குத்தந்தை சதீஷ்செல்வதயாளன், பங்குபேரவை அன்பியங்கள்,அமலவை அருள்சகோதரிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.