

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தாட்கோ மாவட்ட மேலாளா் என்.வசந்தராஜன், திருநெல்வேலி மண்டல மேலாளா் பசுபதி,
தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஷ்ணுவரதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் தாட்கோ மூலம் புதூா் கீழுா் ந.ஆறுமுகம், குத்துக்கல்வலசை சு.திருமலைகுமாா், சங்கனாபேரி வீ.பெரியதுரை ஆகியோருக்கு ரூ. 10 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 3 சுமை ஆட்டோக்களை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.