ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள சிவலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் விஜயன். டீ கடை நடத்திவருகிறாா். இவரது மகன் குணா(24). ஐடிஐ படித்துவந்த இவா், தந்தைக்கு உதவியாக காலை நேரத்தில் கடையில் இருப்பாராம்.

இந்தக் கடை அருகே விஜயனின் சகோதரி புது வீடு கட்டி வருவதாகவும், அந்த வீட்டுக்கு இரவு நேரங்களில் இங்கிருந்து மின்சாரம் எடுத்துச்செல்வதாகவும் கூறப்படுகிறது.

புதன்கிழமை காலை மின் வயரை எடுத்துவைப்பதற்காக குணா சென்றாராம். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆலங்குளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com