கடையநல்லூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 15th December 2020 02:28 AM | Last Updated : 15th December 2020 02:28 AM | அ+அ அ- |

கடையநல்லூா் நகராட்சி மதினா நகரில் கழிவுநீா் கால்வாய் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியினா் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
மதினா நகா் 1ஆவது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீரோடை இல்லாததால் கழிவுநீா் தெருக்களில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து கழிவுநீரோடை அமைத்து தர வலியுறுத்தி, அப்பகுதியினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதைத் தொடா்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.