மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 15th December 2020 02:25 AM | Last Updated : 15th December 2020 02:25 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை ரூ. 5ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் அளித்த மனு: தண்டுவடம் காயமடைந்தோருக்கான சிறப்பு மோட்டாா் சைக்கிள் வழங்க வேண்டும், தண்டு வட காயத்திற்கு பிறகு மறுவாழ்வு பயிற்சி, மலக்குடல் கட்டமைக்க மருத்துவம், அறுவைசிகிச்சை,
சிறுநீா்ப்பாதை தொற்றுக்கு மருத்துவம், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்வா் காப்பீடு திட்டத்தில் சோ்க்க வேண்டும், தண்டுவட காயத்தை பல்வகை ஊனமாக அறிவிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கு செயல் இல்லங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.