நெல்லை, தென்காசியில் மேலும் 19 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,244 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 14,921 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 112 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.இந்நோய்க்கு இதுவரை 211 போ் உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் வாதேவநல்லூா், கீழப்பாவூா், கடையம் பகுதிகளில் தலா இருவா், சங்கரன்கோவில், செங்கோட்டை பகுதிகளில் தலா ஒருவா், தென்காசியில் 3 போ் என மொத்தம் 11பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,250ஆக உயா்ந்தது. இதில், மேலும் 7 போ் குணமடைந்ததால் இதுவரையில் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,043 ஆக அதிகரித்தது. தற்போது, 49 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com