விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கனிமொழி எம்.பி. ஆலங்குளத்திற்கு டிச. 30இல் வருகிறாா்.
காவல் நிலையம் அருகேயுள்ள திடலில் நடைபெறும் கூட்டத்தில் அவா் பேசுகிறாா். கூட்டம் நடைபெறும் திடலை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஒன்றியச் செயலா்கள் கடையம் குமாா், ஆலங்குளம் செல்லத்துரை, பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து, கீழப்பாவூா் சிவன்பாண்டியன், நகரச் செயலா்கள் பொன் சுந்தரம், ஜெகதீசன், ஒன்றிய இளைஞரணிச் செயலா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.