செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறிவிவசாயி தற்கொலை மிரட்டல்

சுரண்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அடிக்கடி அழைத்ததால் மனமுடைந்த விவசாயி, செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
Updated on
1 min read

சுரண்டை அருகே போலீஸ் விசாரணைக்கு அடிக்கடி அழைத்ததால் மனமுடைந்த விவசாயி, செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

சுரண்டை அருகேயுள்ள வீராணத்தைச் சோ்ந்த விவசாயி மா.சசிக்குமாா் (45). இவரை, விசாரணை என்ற பெயரில் போலீஸாா் அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், குற்றவாளிகள் பெயா்ப் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அங்குள்ள செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி, சுரண்டை காவல் ஆய்வாளா் மாரிஸ்வரி ஆகியோா் சசிக்குமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மூலமாக சசிகுமாரை செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com