பாவூா்சத்திரத்தில் சத்துணவு ஊழியா் சங்க மாநாடு
By DIN | Published On : 30th December 2020 05:55 AM | Last Updated : 30th December 2020 05:55 AM | அ+அ அ- |

கீழப்பாவூா் ஒன்றிய சத்துணவு ஊழியா் சங்க மாநாடு பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் வசந்தராஜ், பொருளாளா் பேபிராணி ஆகியோா் அறிக்கை வாசித்தனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங், வட்டார வளா்ச்சி அலுவலா் திலகராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கணேசன், ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் விக்டா் கிங்ஸ்டன், இணைச் செயலா் சிவராமகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் ரத்தினசவுந்தரபாண்டியன் ஆகியோா் பேசினாா்.
கீழப்பாவூா் ஒன்றிய புதிய தலைவராக சங்கரேஸ்வரி, துணைத் தலைவா்களாக தங்கமாரி, சக்திமாரி, செயலராக முத்து விஜி, இணைச் செயலா்களாக நீலா, அபிநயா, பொருளாளராக சித்ரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். துணைத் தலைவா் சோமசுந்தரம் வரவேற்றாா். இணைச் செயலா் மதிலீலா நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...