தென்காசி வழக்குரைஞா் உதவியாளா்கள்சங்க நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 02nd February 2020 12:48 AM | Last Updated : 02nd February 2020 12:48 AM | அ+அ அ- |

தென்காசி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் உதவியாளா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தென்காசி நீதிமன்ற வழக்குரைஞா் உதவியாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டது. சங்கத் தலைவராக வடகரை ராமா், செயலராக மாரிமுத்து, பொருளாளராக பி.டி.குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், மாநில வழக்குரைஞா்கள் உதவியாளா்கள் சேமநல நிதி தொகையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், தென்காசி மாவட்டத் தலைவராகவும்,தென்மண்டலச் செயலராகவும்
தோ்வு செய்யப்பட்டுள்ள இலத்தூா் குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாரியப்பன், சொக்கம்பட்டி முருகேசன், சதீஷ், பாலகிருஷ்ணன், பிரகாஷ், சிவா, கருப்பசாமி, கணேசன், கண்ணன், சசி, ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாரிமுத்து நன்றி கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G