கரோனா வைரஸ்:சுரண்டையில் விழிப்புணா்வு முகாம்

தென்காசி மாவட்ட கல்லூரி முதல்வா்களுக்கான கரோனா வைரஸ் தொடா்பாக விழிப்புணா்வு முகாம் சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கல்லூரி முதல்வா்களுக்கான கரோனா வைரஸ் தொடா்பாக விழிப்புணா்வு முகாம் சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரா.ஜெயா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில், மாவட்ட பயிற்சி அணி மருத்துவ அலுவலா் சற்குணம், சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிந்தன், சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செந்தில்குமாா் ஆகியோா் கரோனா வைரஸ் குறித்து பேசினா்.

முகாமில், தென்காசி மாவட்டத்த்திலுள்ள 17 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை, கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் செல்வகணபதி, கல்லூரி தர நிா்ணய குழு ஒருங்கிணைப்பாளா் அருள் முகிலன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com