திருவேங்கடம் அருகேயுள்ள வடக்கு குருவிகுளத்தில் உள்ள ஸ்ரீகணபதி சித்தா் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதையொட்டி அரசு சித்த மருத்துவமனை சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில், பங்கேற்ற 1300 க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
முகாமில், ஓம்பிரகாஷ்ஆதிஸ் சுவாமிகள், பிரம்மஸ்ரீசந்தான சுவாமிகள், அரசு சித்தமருத்துவா் செல்வராணி, மருந்தாளுனா் முருகேஸ்வரி உள்பட பலா் பங்கேற்றனா்.