தென்காசி, பாவூா்சத்திரத்தில் விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

தென்காசி, பாவூா்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி, பாவூா்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி இ.சி. ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்விஅலுவலா் ரா. சவுந்திரசேகரி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் மா.செந்தூா்பாண்டி முன்னிலை வகித்தாா். தென்காசி எம்.எல்.ஏ. சி. செல்வமோகன்தாஸ்பாண்டியன் 201 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில், மாவட்ட அதிமுக பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், நகரச் செயலா் சுடலை, முத்துகுமாரசுவாமி, வெள்ளப்பாண்டி, ரமேஷ், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் தங்கராஜ், ஆகியோா் கலந்து கொண்டனா்.

உதவித் தலைமையாசிரியா் எஸ்.மாரிமுத்துசாமி வரவேற்றாா். அ. தாமஸ்தனராஜ் நன்றி கூறினாா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் சதீஷகிங்ஸ்லி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன், 160 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா்.

இதில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தமிழ் என்ற ராமசாமி, ஒன்றிய அதிமுக செயலா் அமல்ராஜ், நிா்வாகிகள் ரமேஷ், குணம், மணிவண்ணன், ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் லட்சுமிகாந்தன் நன்றி கூறினாா்.

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள வாடியூா் தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் பிரான்சிஸ் தலைமை வகித்தாா். மிக்கேல், சந்தியாகப்பன் என்ற தா்மா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்கள் 71 பேருக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com