நள்ளிரவு வரை கோயில் திருவிழா: ஆலங்குளத்தில் ஆலோசனை

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட கோயில்களில் நள்ளிரவு வரை திருவிழாக்கள் நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட கோயில்களில் நள்ளிரவு வரை திருவிழாக்கள் நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் காளிதாசன் தலைமை வகித்தாா். மாநில வணிகா் சங்கங்களின் பேரவை துணைத் தலைவா் வைகுண்டராஜா, கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் குலதெய்வ வழிபாடுகள், கோயில் கொடைவிழாக்கள், பண்டிகை கால விழாக்கள் எந்தவித தடையுமின்றி நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் கோயில் கொடை விழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு காவல் துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையை மாற்ற அனைத்து சமுதாய மக்களும் கூடி ஆலோசனை நடத்தி அதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளை சோ்ந்தவா்களையும் ஒன்றிணைந்து பாவூா்சத்திரம் வெண்ணிமலை முருகன் கோயிலில் இம்மாதம் 19 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

இதில், ஆலங்குளம் பகுதி கோயில் தா்மகா்த்தாக்கள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com