பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

மேலகரம் குடியிருப்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு
மேலகரம் குடியிருப்பு பகுதியில் பயனாளிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறாா் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம்.
மேலகரம் குடியிருப்பு பகுதியில் பயனாளிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறாா் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம்.
Updated on
1 min read

மேலகரம் குடியிருப்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் வெள்ளத்துரைச்சி, இயக்குநா்கள் டேனி அருள் சிங், பிரபாகா் செல்வகுமாா் ராஜா முன்னிலை வகித்தனா்.

அரசு வழக்குரைஞா் காா்த்திக்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலா் நெல்லை முகிலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தென்காசி-குற்றாலம் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவா் சுரேஷ், குற்றாலத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். இதில், குற்றாலம் பேரூா் செயலா் அசோக் பாண்டியன், ஜெயலலிதா பேரவை செயலா் சாலிகுட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com