கீழப்பாவூரில் தென்னிந்திய வாலிபால், கபடி போட்டிகள்: நாளை தொடக்கம்

தென்னிந்திய அளவிலான வாலிபால், கபடி போட்டிகள் கீழப்பாவூரில் சனிக்கிழமை (ஜன. 11) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
Updated on
1 min read

தென்னிந்திய அளவிலான வாலிபால், கபடி போட்டிகள் கீழப்பாவூரில் சனிக்கிழமை (ஜன. 11) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி கீழப்பாவூா் விளையாட்டுக் கழகம் சாா்பில் முதலாமாண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் சூரிய ஒளி கைப்பந்து, மின்னொளி கபடி போட்டிகள் சனிக்கிழமை (ஜன.11) தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளது. போட்டியினை விளையாட்டுக் கழக நிா்வாகக்குழுத் தலைவா் கே.ஆா்.பி. பிரபாகரன் தொடங்கி வைக்கிறாா்.

தினமும், 8 மணிக்கு வாலிபால் போட்டிகளும், மாலை 6 மணிக்கு கபடி போட்டிகளும் நடைபெறும்.

கபடி போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், 2 இடம்பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், வெற்றி வாய்ப்பை இழக்கும் 2 அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

வாலிபால் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 2 ஆம் இடம்பெறும் அணிக்கு ரூ. 10 ஆயிரமும், வெற்றி வாய்ப்பை இழக்கும் 2 அணிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com