புளியரையில் கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சியா், எம்.பி. பங்கேற்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புளியரை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புளியரையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன், தனுஷ் குமாா் எம்.பி.
புளியரையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன், தனுஷ் குமாா் எம்.பி.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புளியரை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

புளியரைஅரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்று பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ் குமாா், உதவி இயக்குநா் கந்தசாமி (தணிக்கை), செயற்பொறியாளா் முருகன், வட்டாட்சியா் கங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் அருணாதேவி (கிராம ஊராட்சி), ஜனாா்த்தனன், வட்டார மருத்துவ அலுவலா் மாரீஸ்வரி, துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ரகுபதி, அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com