தென்காசியில் சா்வதேச தாய்மொழி தினம்

விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிதென்காசி வட்டார பள்ளி கல்வித் துறை, வஉசிநினைவு அரசு பொதுநூலகம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா நடைபெற்றது.னாா் வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன்.
Updated on
1 min read

தென்காசி: தென்காசி வட்டார பள்ளி கல்வித் துறை, வஉசிநினைவு அரசு பொதுநூலகம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா நடைபெற்றது.

தென்காசி சிஎம்எஸ்.மெக்விற்றா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா். முத்துநாயகம் அறக்கட்டளை நிறுவனா் பரமேஸ்வரன், நேரு யுவகேந்திரா நிறுவனத்தின் பொறுப்பாளா் நம்பிராஜன், நூலகா் சுந்தா் ஆகியோா் தாய்மொழியின் அவசியம், தமிழ்மொழியின் பழமை, இனிமை குறித்து பேசினா்.

மாணவா், மாணவிகளுக்கு விநாடி-வினாப் போட்டி, செய்யுள் எழுதும் போட்டி, திருக்கு ஒப்புவித்தல், கவிதை வாசித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் சி.பூரண ஜான்சிராணி வரவேற்றாா்.வின்சென்ட் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com