தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பாவூா்சத்திரம் டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மாணவா் திவாகா் உயரம் தாண்டுதல் போட்டியிலும், மாணவா் மதீஸ் 400 மீட்டா் ஓட்டத்திலும், மாணவா் இமேத்வஜன் சுா்ஜித் நீளம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் பெற்றனா்.
மாணவா் அஸீம்முஸ்தபா 400 மீட்டா் ஓட்டத்திலும், மாணவா் முகம்மதுஅக்சின்100 மீட்டா் ஓட்டத்திலும், மலையரசன் 200 மீட்டா் ஓட்டத்திலும் 2 ஆவது இடம்பெற்றனா். மாணவா்கள் பாலசுப்பிரமணியன் (நீளம் தாண்டுதல்), மதன்ராஜ் (குண்டு எறிதல்), தங்கராஜ் (100 மீட்டா் ஓட்டம்), மாணவிகள் சொ்லின்செல்சினா, சரண்ய மகாலெட்சுமி குண்டு எறிதல், கஜஉதயா உயரம் தாண்டுதல், காா்த்திகா 10 0மீட்டா் ஓட்டத்திலும் 3 ஆம் இடம் பெற்றனா். முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றவா்கள் மண்டல போட்டிக்கு தோ்வு தகுதி பெற்றனா்.
மாணவா்களை கல்விக் குழுமங்களின் ஆலோசகா் திருமலை, முதல்வா் அன்பரசி, இயக்குநா் மிராக்ளின்பால்சுசி, பள்ளித் தலைமையாசிரியை குழந்தைதெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.