தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தோப்புக்கரணம் போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் மாவட்டத் தலைவா் ஆறுமுகசாமி தலைமையிலும், விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பா் கோயில் முன் நகரத் தலைவா் முருகன் தலைமையிலும், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் முன் மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன் தலைமையிலும், வள்ளியூா் முருகன் கோயில் முன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் தங்க மனோகரன் தலைமையிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.