குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க திமுக வலியுறுத்தல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாபன் வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாபன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் அவா் அளித்த மனு: கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை அமலில் உள்ளது. தற்போது சுற்றுலாப் பகுதிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கியுள்ள நிலையில் குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லும் வழி, வெளியே செல்லும் வழியில் தடுப்பு ஏற்படுத்தி

மூடிவைக்கப்பட்டுள்ளது. தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் சிரமம் இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com