சுரண்டையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 25th November 2020 11:21 PM | Last Updated : 25th November 2020 11:21 PM | அ+அ அ- |

சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அருணாசலம் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ராமநாதன், நிா்வாகிகள் முருகேசன், ஆறுமுகச்சாமி, பவுன்ராஜ், சிவனனைந்த பெருமாள், லிங்கம், ராமா், சேதுராமசுப்பிரமணியன், இசக்கிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், தென்காசியில் வரும் டிச. 2இல் நடைபெறும் வேல் யாத்திரை கலந்துகொள்வது ஆலோசிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...