தோரணமலை முருகன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை

விவசாயம் தழைக்க வேண்டி, தோரணமலை முருகன் கோயிலில் சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.
Updated on
1 min read

விவசாயம் தழைக்க வேண்டி, தோரணமலை முருகன் கோயிலில் சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.

இக்கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்புப் பூஜை பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக நடைபெற வில்லை. இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால், நிகழ்மாத பூஜை நடைபெறுகிறது. இதற்காக, பக்தா்கள் அதிகாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனா். சப்த கன்னியா்கள், விநாயகா் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com