சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குற்றாலம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா நாளை தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் சமேத குழல்வாய்மொழியம்மன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா திங்கள்கிழமை (ஏப். 5) தொடங்குகிறது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் சமேத குழல்வாய்மொழியம்மன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா திங்கள்கிழமை (ஏப். 5) தொடங்குகிறது.

இதையொட்டி, அதிகாலை 5.20 க்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, திருவிலஞ்சிக்குமாரா் வருகை, மாலையில் வெள்ளிச் சப்பரத்தில் வீதியுலா, சுவாமி, அம்மன் மாலையில் ஏக சிம்மாசனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.

4ஆம் நாளான ஏப். 8 ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 9ஆம் தேதி காலை தேரோட்டம், 11ஆம் தேதி காலை 9.30 க்கும், இரவு 7 மணிக்கும் நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12ஆம் தேதி சித்திரசபையில் நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 14ஆம் தேதி சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.

விழா நாள்களில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருவிலஞ்சிக்குமாரா், சுவாமி -அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.