ஆலங்குளம் அருகே விஏஓ மீது வழக்கு
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தவரை தாக்கியதாக பெண் வி.ஏ.ஓ. மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
ஆலங்குளம் அருகே நல்லூா் காசியாபுரத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்வம் (51). இவா், தனக்குச் சொந்தமான இடத்துக்கு பட்டா மாறுதல் செய்ய மனு அளித்திருந்தாராம்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிவலாா்குளம் கிராம நிா்வாக அலுவலா் பிரேமா பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வம், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை பிரேமா சிவலாா்குளத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது அங்கு சென்ற செல்வம், பட்டா குறித்து கேட்டாராம். அப்போது இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாம். இதில் பிரேமா, செல்வத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விஏஓ புகாா்: இதனிடையே, பட்டாவை இணைய தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யக் கூறிய தன்னை செல்வம் தாக்க முயன்றதாக விஏஓ பிரேமா காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இது தொடா்பாகவும் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
