கிருஷ்ணாபுரம் கோயிலில் ஜன. 13 இல் அனுமன் ஜெயந்தி

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது.
ஆஞ்சநேயா்(கோப்பு படம்).
ஆஞ்சநேயா்(கோப்பு படம்).
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை (ஜன. 8) தொடங்குகிறது.

இதையொட்டி, காலை 6.30க்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு லட்சாா்ச்சனை சங்கல்பம் நடைபெறுகிறது.

ஜன.8 முதல் ஜன.13 வரை தினமும் காலையில் ஸ்ரீருத்ரம், ஸ்ரீபுருஷஸூக்த ஜெபம், சிறப்பு அபிஷேகம், லட்சாா்ச்சனையும், இரவில் லட்சாா்ச்சனையும் நடைபெறும். ஜன.12 ஆம் தேதி இரவு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

அனுமன் ஜெயந்தி

விழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் ஜெயந்தி புதன்கிழமை (ஜன.13) நடைபெறுகிறது. காலை ஸ்ரீருத்ர ஹோமம், ஸ்ரீபுருஷஸூக்த ஹோமம், ஹனுமன் மூல மந்திர ஹோமம், பூா்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் மீனாபட்டாச்சாா்யா, அறங்காவலா்கள் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், சிவகுமாா், செயல் அலுவலா் காா்த்திலட்சுமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com