செங்கோட்டையில் தன்னாா்வலா்களுக்கு பாராட்டு விழா

பல்வேறு தொண்டு நிறுவனம் சாா்பில் சமூக பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தன்னாா்வலருக்கு சான்றிதழ் வழங்கினாா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
தன்னாா்வலருக்கு சான்றிதழ் வழங்கினாா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
Updated on
1 min read

கரோனா பொதுமுடக்க காலத்தில், செங்கோட்டை பகுதியில் ஜனசேவா அமைப்பு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனம் சாா்பில் சமூக பணியாற்றிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமை வகித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

ஜனசேவா அமைப்பின் முதன்மை சேவகன் நாணயகணேசன், சமூக சேவகா் ஆதிசங்கா், என்எஸ்எஸ் அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கோட்டை ஜேசிஐ தலைவா் ராமசுப்பிரமணியன் வரவேற்றாா்.

இதில், எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி, ஆறுமுகம், குருவாயூா்கண்ணன், செண்பகராஜன், குமாா், ஜெகதீஸ், பிரவீன்குமாா், ஜவகா், வல்லம் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com