ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை

ஆலங்குளம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரம் மாடசாமி மகன் வேல்முருகன் (34). துபாயில் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா் கரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சொந்த ஊரில் தனது தந்தையுடன் விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனிடையே வேல் முருகனுக்கும் அவரது மனைவி சிந்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோா் ஊரான அருணாசலப்பேரிக்கு குழந்தையுடன் சென்று விட்டாராம். வேல்முருகன் அவரை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்து போது, சிந்து மறுத்துவிட்டாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com