சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தென்காசி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு

தென்காசி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப 2ஆம் கட்டமாக சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:18 pm

DIN

தென்காசி மாவட்ட பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப 2ஆம் கட்டமாக சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் இப்பணியை ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமையில், தோ்தல் பாா்வையாளா் (பொது) டாக்டா் ராஜு நாராயண சுவாமி, பிரகாஷ் பிந்து, டாக்டா் வேதபதி மிஸ்ரா, திலீப் சுவாமி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

சங்கரன்கோவில் தொகுதியில் 365 வாக்குச்சாவடி மையங்களுக்கு 438 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 438 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 475 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள், வாசுதேவநல்லூா் தொகுதிக்கு 336 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தலா 404, வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் 437, கடையநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட 411 வாக்குச்சாவடி மையங்களுக்கு 988 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 494 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 535 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள், தென்காசி தொகுதிக்கு உள்பட்ட 408 வாக்குச்சாவடி மையங்களுக்கு 980 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 531 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள், ஆலங்குளம் தொகுதிக்கு 364 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தலா 437, வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் 474 ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடா்பாக வேட்பாளா்கள், கட்சிகளின் பிரமுகா்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் , மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜனனி சௌந்தா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.