சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்கரன்கோவிலில் தோ்தல் நடத்தும் அலுவலா் மீது திமுக புகாா்

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரனிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:55 pm

DIN

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரனிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

மனு விவரம்: சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக,கோட்டாட்சியா் முருகசெல்வி , தன்னுடைய சக ஊழியா்களிடம் திமுக வேட்பாளா் வெற்றிபெற்றாலும், அதிமுக வேட்பாளா் வெற்றிபெற்ாகவே அறிவிப்பேன். நான்தான் முடிவு செய்யவேண்டும்; மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையும் என பேசியுள்ளாா். அமைச்சரின் இல்ல விழாவில் கோட்டாட்சியா் தான் முன்னின்று நடத்தியுள்ளாா். எனவே, அவரை இந்தத் தொகுதியிருந்து மாற்றிவிட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனு அளித்தபோது, தென்காசி நகரச் செயலா் சாதிா், ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், சீவநல்லூா் சாமித்துரை, வழக்குரைஞா் பிரிவு துணை அமைப்பாளா் வேலுசாமி, சங்கரன்கோவில் தொகுதி பாா்வையாளா் சரவணன், ஜெயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.