அதிக வைக்கோல் பாரம்: 10 லாரிகளுக்கு அபராதம்
By DIN | Published On : 20th August 2021 12:27 AM | Last Updated : 20th August 2021 12:27 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக அதிக வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற 10 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புளியரை சோதனைச் சாவடியில் காவல் உதவிஆய்வாளா் முத்துகணேஷ் தலைமையிலான போலீஸாா் கடந்த இரு தினங்களாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் வைக்கோல் ஏற்றிச்சென்ற 10 லாரிகளுக்கு போலீஸாா் தலா ரூ. 2,500 வீதம் அபராதம் விதித்தனா்.