சங்கரன்கோவிலில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் எம்.குருசாமி தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும் கோஷமிட்டனா்.